< Back
மாநில செய்திகள்
அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் சாவு

தினத்தந்தி
|
26 Jan 2023 10:01 PM GMT

அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் இறந்தாா்.

ஈரோடு வாய்க்கால்மேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மகன் ஆனந்த் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவில் அளவுக்கு அதிகமாக மது குடித்து உள்ளார். இதனால் நள்ளிரவில் ஆனந்த் வாந்தி எடுத்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவருடைய தாய் ராதாமணி, உறவினர்கள் உதவியுடன் ஆனந்தை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்