< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி வாலிபர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
23 July 2023 6:52 PM GMT

அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம்,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது21). இவர் தனது இரு சக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக ஆலங்குளம் சென்றார். பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது விஜயகரிசல்குளம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்துக்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முத்துச்சாமி (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்