< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

சிவகிரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகிரி:

சிவகிரி குமாரபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 17). இவர் தந்தையுடன் சேர்ந்து மாடு மேய்க்க சென்று வந்தார். கடந்த சில நாட்களாக சக்திவேல் வேலைக்கும் செல்லாமல், மாடு மேய்க்கவும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்