< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Oct 2023 7:25 PM GMT

உவரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை:

உவரி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் மணிகண்டன் (வயது 35). இவருக்கு 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 28-ந் தேதி மனைவியை அவரது சொந்த ஊரான ஏர்வாடி வன்னியன்குடியிருப்பிற்கு அனுப்பி வைத்து உள்ளார். 1-ந் தேதி மனைவியிடம் வள்ளியூரில் இருந்து செல்போனில் பேசியுள்ளார். இந்த நிலையில் உவரி - வெம்மணங்குடி ரோடு மங்கம்மா சாலையில் உள்ள முந்திரி தோப்பில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் அழுகிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அவரது தந்தை உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்