< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
30 Sep 2023 7:00 PM GMT

ஆத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் புதுநகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகன் விசாகன் (வயது 19). இவர் சமீபத்தில் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவருக்கு உடலில் தோல் நோய் இருந்துள்ளது. இதற்காக ஆத்தூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தனக்கு தோல் நோய் இருப்பதை உணர்ந்து மனமுடைந்த விசாகன் நேற்று முன்தினம் பிற்பகலில் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விசாகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்