< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2023 6:45 PM GMT

புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை:

புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 44). இவருடைய மகன் அருண் (28). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மேலும் தனது சொத்தை பிரித்து கேட்டு வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சொத்தை பிரித்து தர கேட்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் இரவில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அசோகன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்