< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|5 Jun 2023 6:25 PM GMT
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை ேசர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோகுல் (வயது 21), ஸ்ரீபெரும்பதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கோகுல் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தக்கோலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.