< Back
மாநில செய்திகள்
புதுப்பேட்டை அருகே    வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

புதுப்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
28 July 2022 4:35 PM GMT

புதுப்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் வசந்த் (வயது 21). சம்பவத்தன்று இவருக்கும், அவருடைய தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வசந்த் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று வசந்த் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்