< Back
மாநில செய்திகள்
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
8 Oct 2023 7:00 PM GMT

பாவூர்சத்திரத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் காமராஜ்நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிச்செல்வம் (வயது 35). இவர் சங்கரன்கோவிலில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். சம்பவத்தன்று தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மாரிச்செல்வம் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்