< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Jan 2023 6:45 PM GMT

தூத்துக்குடியில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த சகாயராஜ் மகன் பிரசாத் (வயது 33). இவர் கடந்த 14.10.2022 அன்று பூபல்ராயர்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றாராம். அப்போது தனது செல்போனை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து உள்ளார். அவர் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வந்த போது, மோட்டார் சைக்கிளில் வைத்த இருந்த செல்போனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (24) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் செல்போன் திருடிய சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்