< Back
மாநில செய்திகள்
செல்போன் திருடிய வாலிபர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
2 Oct 2022 5:42 PM GMT

நாட்டறம்பள்ளி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் வசிப்பவர் நந்திராஜன். இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களுடன் தேங்காய் வெட்டி கொண்டிருந்த பொழுது மது போதையில் வந்த அடையாளம் தெரியாத நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். இதனால் நந்திராஜன் வீட்டிற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.

மது போதையில் வந்த நபர் தண்ணீர் குடித்து விட்டு போன பிறகு தங்களிடத்தில் இருந்த செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நந்திராஜன் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்போன் சிக்னலை வைத்து,செல்போனை திருடிச்செனற மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் காட்டுநாயப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் பிரசாந்த் (வயது25) என தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்தயப்பட்டது. மேலும் அவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்