< Back
மாநில செய்திகள்
செல்போன் திருடிய வாலிபர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 July 2023 6:47 PM GMT

ஆற்காட்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வேலூர் மாவட்டம் ஊனைபள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 20) என்பவர் ஆற்காடு பகுதியில் தனியார் ஓட்டல் மேலாளரிடம் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்