< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்ற வாலிபா் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சாராயம் விற்ற வாலிபா் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 6:45 PM GMT

சங்கராபுரம் அருகே வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்