< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 July 2022 9:50 AM GMT

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் தம்பிதுரை (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்