< Back
மாநில செய்திகள்
பாட்டிலால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
வேலூர்
மாநில செய்திகள்

பாட்டிலால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
19 Aug 2023 10:37 AM GMT

காகிதப்பட்டறையில் பாட்டிலால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காகிதப்பட்டறையில் பாட்டிலால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்டில் குத்து

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற மணி (வயது 23). இவர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரில் வசித்து வந்தார். காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகன் ஆகாஷ் (18) என்பவருக்கும், மணிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த பாட்டிலை எடுத்து உடைத்து ஆகாஷ் மீது குத்தினார். இதில் அவருக்கு அதிகமாக ரத்தம் கொட்டியது.

சிகிச்சை பலனின்றி சாவு

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆகாஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை வழக்காக மாற்றம்

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆகாஷ் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது. அவருக்கும், மணிக்கும் இடையே நடந்த தகராறில் காயமடைந்த ஆகாஷ் இறந்துள்ளார்.

இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்