< Back
மாநில செய்திகள்
விபத்தில் இளம்பெண் பலி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விபத்தில் இளம்பெண் பலி

தினத்தந்தி
|
31 May 2022 5:12 PM GMT

கயத்தாறு அருகே விபத்தில் இளம்பெண் இறந்தார்

கயத்தாறு:

தூத்துக்குடி. அருகே உள்ள மேலஅரசரடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 30). இவருடைய மனைவி பவித்ரா (27).

இருவரும் கடந்த 28-ந்தேதி தூத்துக்குடியிலிருந்து கயத்தாறு வழியாக தென்காசி மாவட்டம் களக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அய்யனார்ஊத்து கிராமம் அருகே சென்றபோது பின்பக்கத்தில் இருந்த பவித்ரா கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். பவித்ராவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பவித்ராவுக்கு ஜெகதீஷ் (7), முகேஷ் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்