< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 Sep 2023 8:00 PM GMT

தஞ்சையில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மதியழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், பி.எட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக் கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்