< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு
|27 May 2022 8:13 PM GMT
ஓசூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு; துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தார்.
ஓசூர்:
ஓசூர் பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி கோமதி (63). நேற்று அதிகாலை மாணிக்கம் திடீரென உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்துடன் இருந்த கோமதியும் திடீரென இறந்தார். கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.