< Back
மாநில செய்திகள்
மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கை
தர்மபுரி
மாநில செய்திகள்

மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கை

தினத்தந்தி
|
26 May 2022 4:53 PM GMT

தர்மபுரி அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுபுலியூரை சேர்ந்தவர் முபாரக் (வயது 26). தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர். இந்தநிலையில் முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். இதையடுத்து முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்