< Back
மாநில செய்திகள்
கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில்  காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் அமல்
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் அமல்

தினத்தந்தி
|
15 Jun 2022 5:35 PM GMT

கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம்:

கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகள்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் கொல்லிமலை நுழைவுவாயில் பகுதியில் உள்ள சோளக்காடு, செம்மேடு மற்றும் செங்கரை ஆகிய 3 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் மதுக்கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி குடித்து விட்டு ஆங்காங்கே காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். சிலர் வனப்பகுதியில் ஆங்காங்கே மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் மலைவாழ் மக்கள், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மலை வாசஸ்தலங்களில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்கி குடித்த பின்னர் காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு

அதன்படி நேற்று முதல் கொல்லிமலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி மதுக்கடையில் குவார்ட்டர், புல் மற்றும் பீர் பாட்டில்கள் என எந்த வகையாக இருந்தாலும் அவைகள் மீது அந்தந்த கடைகளுக்கு உரிய சீல் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் கொல்லிமலையில் மதுப்பிரியர் எந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கினரோ அதே கடையில் திரும்ப காலி பாட்டிலை கொடுத்தால் ரூ.10 கொடுக்கப்படும் என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்லிமலையில் உள்ள 3 மதுக்கடைகளிலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்