< Back
மாநில செய்திகள்
தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலித்தது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலித்தது

தினத்தந்தி
|
1 Dec 2022 8:21 PM GMT

தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலித்தது

இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென்ஆப்பிரிக்கா, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று ஜி-20 அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஏற்கும். இந்த வரிசையில் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியா வசம் வந்தது. இந்தியா நேற்றுமுன்தினம் இந்த தலைமை பொறுப்பை ஏற்றது. ஓராண்டு காலத்துக்கு தலைமை ஏற்றுள்ளது. இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 என்ற அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஒளிர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை பெரியகோவில் நுழைவு வாயிலில் உள்ள மராட்டா வாயில் சுவரில் நேற்றுஇரவு ஜி-20 என மின்னொளியில் ஒளிர செய்யப்பட்டது. மேலும் அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரும், உள்புறமுள்ள கோட்டை சுவரும் மின்னொளியில் ஜொலித்தது.

மேலும் செய்திகள்