< Back
மாநில செய்திகள்
தஞ்சை : பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை : பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
1 Jun 2022 8:13 AM GMT

தஞ்சையில் முதன்மை கல்வி அதிகாரிக்கு எதிராக விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த கூடிய பணி இன்று தொடங்கிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்த முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர்களை ஒருமையில் திட்டியது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அதிகாரி நேரில் வந்து ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்

மேலும் செய்திகள்