< Back
மாநில செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல - அமைச்சர் சேகர் பாபு
மாநில செய்திகள்

'தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல' - அமைச்சர் சேகர் பாபு

தினத்தந்தி
|
17 Sep 2023 5:14 PM GMT

தமிழகத்தில் இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5,770 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5,770 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே குடமுழுக்கு விழாக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதது குறித்து புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சேகர் பாபு, "தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல. புதுச்சேரியில் கவர்னருக்கான பணிகளை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பதவி தேவை என்றால் அவரது தலைமையிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற விமர்சனங்களில் ஈடுபட்டு பதவி பெற வேண்டும் என்று நினைப்பது தவறு. அவரது எல்லைக்கு உட்பட்டு அவர் நடந்து கொண்டால், நாங்களும் எங்கள் எல்லைக்கு உட்பட்டு பதில்களை சொல்வோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்