< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்
மாநில செய்திகள்

தமிழக அரசு மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
28 Sep 2022 7:07 AM GMT

தமிழக அரசு மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைக்கும் பணிகளாலும், மெட்ரோ ரெயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம், மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் என்று பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு நாளும் சென்னைவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெறுவதை பார்க்கும் போது தமிழக அரசுக்கு முறையான திட்டமிடல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பும் எந்தவித ஒத்துழைப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது.

விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளம் வெட்டி வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. எனவே இந்த ஆட்சியாளர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளையும், மெட்ரோ ரெயில் பணிகளையும் இந்த ஆட்சியாளர்கள் விரைந்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்