< Back
மாநில செய்திகள்
5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது - தமிழக அரசு அறிவிப்பு
மாநில செய்திகள்

5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது - தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2022 2:47 PM GMT

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  1. சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி
  2. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கா.ஜெயமோகன்
  3. சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன்
  4. விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பா.இனாயத் பாஷா
  5. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சு.சிவனேசன்

ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்