< Back
மாநில செய்திகள்
சுயம்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சுயம்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
7 March 2023 7:09 PM GMT

கரையாம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே கரையாம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்