< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடைநீக்கம்
|28 Sep 2023 1:46 PM GMT
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குடியாத்தம்
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன், கிராம உதவியாளர் தேன்மொழி ஆகியோர் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகனை பணியிடை நீக்கம் செய்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.
அதேபோல் அக்ராவரம் கிராம உதவியாளர் தேன்மொழியை பணியிடை நீக்கம் செய்து குடியாத்தம் தாசில்தார் வி.சித்ராதேவி உத்தரவிட்டார்.