< Back
மாநில செய்திகள்
கண்காணிப்பு கேமராக்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

கண்காணிப்பு கேமராக்கள்

தினத்தந்தி
|
18 Sep 2023 7:31 PM GMT

கண்காணிப்பு கேமராக்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்


விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பங்களிப்புடன் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை மக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் திறந்து வைத்தார். இதில் விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அப்பபகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்