< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகே  பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
16 Nov 2022 6:34 PM GMT

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). விவசாயி. இவருடைய மகன் ஹரிஷ் (17). இவர் ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் ஹரிசுக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.

விசாரணை

இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவர் ஹரிசுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஹரிசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்