< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகேடிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகேடிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
18 May 2023 7:00 PM GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் குண்டல்பட்டி அருகே உள்ள சாலையோர மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்