< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|5 April 2023 7:00 PM GMT
ஓசூர்:
ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுப்ரீத். இவருடைய மனைவி கீதா (வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கீதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கீதா கடந்த 3-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 ஆண்டுகளில் பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.