< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
சிவகங்கை
மாநில செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

தினத்தந்தி
|
14 March 2023 6:45 PM GMT

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி ஆனந்த வள்ளி (வயது 65). இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று வீட்டுக்கு அருகே உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று விஷம் குடித்தார்.

இதைப் பார்த்த இவருடைய மருமகள், உடனடியாக ஆனந்த வள்ளியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த வள்ளி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்