< Back
மாநில செய்திகள்
மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
3 Feb 2023 6:45 PM GMT

பள்ளிபாளையம்:

மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

பள்ளிபாளையம் அருகே மொளசி தொட்டிகாரன்பாளையத்தை சேர்ந்தவர் சுமித் (வயது 29). நூல் மில் தொழிலாளி. இவருடைய மனைவி கனிதா (27). இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்க ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை சுமதி வேலைக்கு சென்று வந்து வீட்டில் படுத்து தூங்கினார். இதையடுத்து கனிதா கணவரை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கனிதா, கணவரின் அண்ணன் அமித் உதவியுடன் கணவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

விசாரணை

பின்னர் சுமித் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுமித் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கனிதா மொளசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சுமித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=======

மேலும் செய்திகள்