< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்பெண் தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
7 Jan 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சந்தேகம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட என்.கொசவம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 36). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தமிழ்செல்விக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த தமிழ்செல்வி நேற்று முன்தினம் இரவு படுக்கையில் அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தமிழ்செல்வியின் தாயார் ஜோதி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தமிழ்செல்வி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்