< Back
மாநில செய்திகள்
தளி அருகே  விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
18 Sep 2022 6:45 PM GMT

தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள கல்கேரியை சேர்ந்தவர் கிருஷ்ணாச்சாரி (வயது 65). விவசாயி. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணாச்சாரி கடந்த 9-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணாச்சாரி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்