< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகே பேக்கரி மாஸ்டர் எலி மருந்து குடித்து தற்கொலை
|7 Sep 2022 4:07 PM GMT
பர்கூர் அருகே பேக்கரி மாஸ்டர் எலி மருந்து குடித்து தற்கொலை
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள நேரலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தசரதன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 29). பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் எலி மருந்தை குடித்துவிட்டார். உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.