< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 Sep 2022 5:23 PM GMT

நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவர்

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் முகிலன் (வயது 15). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் முகிலன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனம் உடைந்து மாணவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்