< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை  காரணம் என்ன? போலீசார் விசாரணை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
18 July 2022 4:24 PM GMT

நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 58). லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும், இணை செயலாளராகவும் பதவி வகித்தவர் ஆவார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கணபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. அவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்