< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்  ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
17 July 2022 6:01 PM GMT

ராசிபுரத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் வி.நகர்-1 பகுதியை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 21). இவர் படித்து விட்டு வேலையின்றி வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிலம்பரசனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சிலம்பரசன் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதை அவரது பெற்றோர் தடுத்தனர்.

இந்த நிலையில் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வெளியே சென்ற சிலம்பரசன் ராசிபுரம் டவுன் சேலம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் சேலம்- கரூர் அகல ரெயில் பாதையில் வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தந்தனர்.

அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிலம்பரசன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்