< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  பெண் தீக்குளித்து தற்கொலை  போலீசார் விசாரணை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
25 May 2022 4:15 PM GMT

நாமக்கல்லில், கணவர் மது குடித்து விட்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல்லில், கணவர் மது குடித்து விட்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தீக்குளிப்பு

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மனைவி சுகன்யா (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குமரவேல் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி குமரவேல் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனம் உடைந்த சுகன்யா வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சுகன்யாவின் தந்தை மணி (55) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்