< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
11 Feb 2023 3:55 PM GMT

திருத்தணி அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிவாடா கிராமத்தில் இருந்து திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. என்.என். கண்டிகை - நெமிலி இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் மீது சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். சாலையோரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்