< Back
மாநில செய்திகள்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி 'திடீர்' நிறுத்தம்

தினத்தந்தி
|
1 Sep 2023 9:47 PM GMT

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதலாவது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை 8.15 மணியளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அதன் காரணமாக மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதினை சீரமைக்கும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்