< Back
மாநில செய்திகள்
நொய்யல் பகுதியில் திடீர் மழை
கரூர்
மாநில செய்திகள்

நொய்யல் பகுதியில் திடீர் மழை

தினத்தந்தி
|
6 Sep 2022 7:37 PM GMT

நொய்யல் பகுதியில் திடீர் மழை பெய்தது.

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், புன்னம்சத்திரம், புன்னம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே அவதிப்பட்டு சென்றனர். தொடர் மழையால் குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்