< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணி திடீர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கர்ப்பிணி திடீர் சாவு

தினத்தந்தி
|
21 July 2023 6:45 PM GMT

திருக்கோவிலூரில் கர்ப்பிணி திடீரென இறந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் இர்பான்கான். இவரது மனைவி பர்கத்பீவி (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் 7 மாத கர்ப்பமாக இருந்த பர்கத்பீவி சம்பவத்தன்று இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்கவில்லை.

இதில் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பர்கத்பீவியை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திரிக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பர்கத்பீவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்கத்பீவி எப்படி இறந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி திடீரென இறந்ததால் அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் யோகஜோதி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்