< Back
மாநில செய்திகள்
தொழிலாளி திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

தொழிலாளி திடீர் சாவு

தினத்தந்தி
|
27 Nov 2022 7:17 PM GMT

தொழிலாளி திடீரென இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள என். புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 49). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கரூர் ஜவகர் பஜாரில் உள்ள கோவில் அருகே நடந்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜெய்சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்