< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தொழிலாளி திடீர் சாவு
|13 Aug 2023 6:52 PM GMT
அருப்புக்கோட்டையில் தொழிலாளி திடீரென இறந்தார்.
அருப்புக்கோட்டை,
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி விலக்கில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கனி என்பவர் மாஸ்டராக வேலை செய்து வந்தார். வழக்கம் போல் பணியை முடித்து கனி சென்றார். ஆனால் மீண்டும் அவர் பணிக்கு வராமல் இருந்ததால் ஓட்டல் தொழிலாளர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது பந்தல்குடி டாஸ்மாக் அருகே உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பந்தல்குடி போலீசார் கனியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.