< Back
மாநில செய்திகள்
தொழிலாளி திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

தொழிலாளி திடீர் சாவு

தினத்தந்தி
|
12 July 2023 7:02 PM GMT

தொழிலாளி திடீர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஒரு வாரமாக ராஜபுரம் பிரிவு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலலக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி மதிய உணவு சாப்பிட்டு விட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த வடிவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சின்னதாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வடிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்