< Back
மாநில செய்திகள்
கொத்தனார் திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

கொத்தனார் திடீர் சாவு

தினத்தந்தி
|
15 Sep 2023 6:32 PM GMT

கொத்தனார் திடீரென இறந்து விட்டார்.

புன்னம் சத்திரம் அருகே உள்ள குட்டக்கடை வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கொத்தனாரான இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கினார். நேற்று காலை ரமேசின் மனைவி சுமதி அவரை எழுப்பி உள்ளார். அப்போது ரமேஷ் மூச்சுபேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்