< Back
மாநில செய்திகள்
விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணி திடீர் சாவு
சென்னை
மாநில செய்திகள்

விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணி திடீர் சாவு

தினத்தந்தி
|
2 Jun 2022 5:15 AM GMT

விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து பயணி திடீரென உயிரிழந்தார்.

திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-வது தளத்தில் நேற்று பயணி ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், பயணியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்ததும் தெரிந்தது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்த முகம்மது ரயூப் (வயது 61) என்பதும், நுங்கம்பாக்கத்தில் டிரைவராக வேலை செய்து வருவதும், நேற்று வேலை முடிந்து மெட்ரோ ரெயிலில் விம்கோநகர் வந்து இறங்கி வீட்டுக்கு செல்லும்போது மயங்கி விழுந்து இறந்ததும் தெரிந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்