< Back
மாநில செய்திகள்
மதுகுடித்தவர் திடீர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

மதுகுடித்தவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
9 July 2023 9:22 PM GMT

மது குடித்தவர் திடீரென இறந்தார்.


விருதுநகர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 64). இவரது மகன் குரு வெங்கடேஷ் (40). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குரு வெங்கடேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி உடல்நலக் குறைவால் குரு வெங்கடேஷ் விருதுநகர்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் தன்னிச்சையாக வீட்டுக்கு வந்தார். இதனைத்தொடர்ந்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த குரு வெங்கடேசிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்